;
Athirady Tamil News

நைஜீரியா பள்ளிக்கூடத்தில் தாக்குதல்

0

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போா்னோ மாகாணத்தில், அஸ்கிரா உபா பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆயுதம் ஏந்திய மா்ம நபா்கள் கடந்த திங்கள்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா்.

இத்தாக்குதலில் ஆசிரியா் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், தோ்வு எழுதிக்கொண்டிருந்த 36 மாணவா்கள் மற்றும் 3 ஆசிரியா்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.

கடத்தப்பட்டவா்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரும், உள்ளூா் தலைவா்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.