;
Athirady Tamil News

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

0

இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு அருட்சகோதரி பலத்த காயமடைந்துள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த ‘மாசற்ற அமலோற்பவ அன்னை’ சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள் சென்ற வாகனமீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.