;
Athirady Tamil News

லைபீரியா வரலாற்றிலே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!

0

மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைபீரியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை ஜூலை 21, 2026 அன்று நடைபெற்றது.

இதன்போது சுமார் 370 மில்லியன் டாலர் மதிப்புள்ள உயர்தர கொக்கைனைப் போலீசார் கைப்பற்றினர். இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைபீரிய நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை பிடிபட்ட போதைப்பொருட்களின் அளவுகளில் இதுவே மிகப்பெரிய அளவாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.