;
Athirady Tamil News

வவுனியாவில் ஐந்து இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!

0

வவுனியாவில் ஐந்து இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!

வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா இன்று இடம்பெற்றது. இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ் குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.