;
Athirady Tamil News

திடீரென பற்றியெறிந்த பயணிகள் கப்பல் ; 5 பேர் பலி ; பலர் மாயம்

0

பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கரைக்கு அருகில் சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்புப் பணிகள்
விபத்து குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டின் கடலோரக் காவல்படை, குறித்த கப்பலில் 134 பேர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 42 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கப்பலில் பயணம் செய்தவர்களில் 87 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வௌியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.