;
Athirady Tamil News

உலருணவுப் பொதிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் செல்வி கௌசி (படங்கள் & வீடியோ)

0

உலருணவுப் பொதிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் செல்வி கௌசி (படங்கள் & வீடியோ)

தாயக உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினார் செல்வி கௌசி சஸ்பாநிதி.
#################################
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில் வசிக்கும் செல்வி கௌசி சஸ்பாநிதி அவர்கள்.

புங்குடுதீவு வழித்தோன்றலாய் லண்டனில் வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர்களான சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் இரண்டாவது மகள் ஜெயா என அழைக்கப்படும் பிரான்சில் வசிக்கும் திரு திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி கௌசி இன்று தனது பிறந்த நாளை பிரான்சில் கொண்டாடினார்.

வழமைபோலவே தனது பிறந்தநாளில் உதவி வழங்குவதோடு மற்றவர்களை மகிழ்ச்சியடைய வைத்து மகிழும் உள்ளமான செல்வி.கௌசி சஸ்பாநிதி இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக அன்றாட உழைப்பை வருமானங்களை இழந்து பட்டினியின் கோரப் பிடிகளுக்குள் சிக்குண்டு தவிக்கும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களின் பசியை நீக்க உலருணவுப் பொதிகளை தனது பிறந்த நாளில் வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டு தனது நிதிப் பங்களிப்பை தந்துள்ளார்..

செல்வி கௌசி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய செல்வி கௌசியின் பிறந்தநாளான இன்று இராசேந்திர குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகாமையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற குடியிருப்பான விக்ஸ் காடு என அழைக்கப்படும் கிராமத்தில் வசிக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் அவர்களின் வீடுகளுக்கே சென்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

மிக ஏழ்மையான நிலையில் வாழும் இக்குடும்பங்களின் வாழ்விடங்களே இக்குடும்பங்களின் வாழ்வியலின் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிய மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தேடல்களே, புலம்பெயர் சமூகத்தின் நம்பிக்கையான நற்பணிகளின் தொடர் செய்ற்பாடாகும்.

அந்தவகையில் இன்றைய நாளில் தாயக உறவுகளான சிறுவர் சிறுமியர்களோடு பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி மற்றவர்களை மகிழ வைத்து தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய செல்வி கௌசியை தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லா வளமும் பெற்று இனிதாக வாழ்ந்திட வேண்டி வாழ்த்துகிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

24.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.