;
Athirady Tamil News

பிரான்ஸ் பாலநேசனின் குழந்தைகளின் பிறந்ததினத்தை முன்னிட்டு மூன்றாம் கட்டமாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள்)

0

இரட்டையர்களோடு இளையவர் கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூன்றாம் கட்ட உலருணவுப் பொதி வழங்கள்…
###################################
பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு திருமதி பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்லக் குழந்தைகளின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்றாம் கட்ட வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வவுனியா ஓமந்தை,.மாணிக்கம் வளவு கிராமத்தில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய பொருளாதார வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.அச்சுவேலியை சேர்ந்தவர்களும், பிரான்ஸ் பாரிசில் வசிப்பவர்களுமான பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்வன்.யாமிலன், செல்வி.யாமினி ஆகிய இரட்டையர்களின் 11 வது பிறந்தநாள், மற்றும் இளைய புதல்வன் செல்வன்.ஆதித்தியாவின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும், பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கொண்டாடிய பிறந்தநாள் கொண்டாட்டத்துடன், வாழ்வாதார உதவியான உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

திரு.திருமதி.பாலநேசன் துவாரகா தம்பதிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சேவையை சமூக வலைத்தளங்களில் கேள்வியுற்று பார்த்து தாமாகவே முன்வந்து “நாளாந்த வருமானத்தை இழந்து வாழ்க்கைப் போராட்டத்தில அந்தரப்பட்டுக் கொண்டிருக்கும் எம் தாயக உறவுகளுக்கு உதவி செய்வது தமது தார்மீகக் கடமையெனக் கூறி” அதேநேரம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சேவையாளர்கள் உதவி தேவைப்படுவோர் இல்லம் சென்று குறித்த குடும்பங்களுக்கு தேவையான உதவியினை நேரடியாக வழங்கும் சேவையை நாம் போற்றுகின்றோம், இவ்வாறான சேவையினை விரும்பியே எமது பிள்ளைகளின் பிறந்த நாளினையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக செய்ய விரும்புகின்றோம்” எனக்கூறி.. அதனாலேயே இவ்வுதவியை திரு.திருமதி.பாலநேசன் துவாரகா தம்பதிகள் தமது மூன்று பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு நிதிப்பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

யாழ்.அச்சுவேலியை சேர்ந்தவர்களும் பிரான்ஸ் பாரிசில் வசிப்பவர்களுமான பாலநேசன் துவாரகா தம்பதிகளின் யாமிலன், யாமினி ஆகியோரின் இரணைப் பிள்ளைகளின் 11 வது பிறந்தநாள், மற்றும் இளைய புதல்வன் ஆதித்தியாவின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும், பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியாக இன்றைய நாளில் ஓமந்தை மற்றும் மாணிக்கர் வளவு கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

திரு.திருமதி பாலநேசன் துவாரகா தம்பதிகள் தங்களின் பிள்ளைகளின் பிறந்ததினத்துக்கு வழங்கிய பெரும் தொகையான உலருணவுப் பொதிகளில் குறித்த பிறந்த நாளன்று சிறு தொகையளவே வழங்கப்பட்டது. முதற்கட்டமாக சிதம்பரபுரம். கற்குளம், பறநட்டங்கல், பனிக்கர் புளியங்குளம் என மிகவும் கஸ்ரப் பிரதேசங்களில் வாழும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக சொச்சிக்குளம், பறநட்டங்கல், பனிக்கர் புளியங்குளம் என மிகவும் கஸ்ரப் பிரதேசங்களில் வாழும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. மிகுதி மூன்றாம் கட்டமாக ஓமந்தை பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்கு கட்டம் கட்டமாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் “ஆதித்யா, யாமிலன் யாமினி” ஆகியோரின் பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

மேற்படி வாழ்வதார உதவிகளுக்கான நிதிப் பங்களிப்பை வழங்கிய இவர்களுக்கு பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” நன்றிகளைத் தெரிவிப்பதுடன், இன்றைய நாளில் இனிய பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.திருமதி. பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான “ஆதித்யா, யாமிலன், யாமினி” ஆகியோரை “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

07.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.