;
Athirady Tamil News

கனடா குணராஜா ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவிகளும்.. (வீடியோ, படங்கள்)

0

கனடா குணராஜா ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவிகளும்.. (வீடியோ, படங்கள்)
##################################
புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவரும் கனடா நாட்டில் வசிப்பவருமான திரு.குணராஜா ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாயக கிராமத்து உறவுகளோடு கொண்டாடப்பட்டது.

முன்னதாக ஸ்ரீராஜா அவர்களது தந்தையாரின் இருபத்தைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு இன்றைய நாளில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் வாழ்வாதார உதவியாக கோழிகளோடு கோழிக் கூடு வழங்கப்பட்ட இடத்தில் ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

அதேவேளை பிறிதொரு கிராமமான கற்குளம் வாழ் சிறுவர்கள் விரும்பிக் கேட்ட்தின் பிரகாரம், கற்குளம் 4 இலும் திரு.ஸ்ரீராஜா குணராஜா அவர்களது பிறந்த நாள் மீளவும் கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவு வழித்தோன்றல்களும், கொழும்பில் வாழ்ந்தவர்களும், கனடாவில் வசிப்பவர்களுமான அமரர் குணராஜா திருமதி கு.சரஸ்வதி தம்பதிகளின் இளையமகன் ஸ்ரீ எனும் ஸ்ரீராஜா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு “குணராஜா” குடும்பத்தின் சார்பில் வழங்கப்படட நிதிப் பங்களிப்பில் இன்றையதினம் கேக் வெட்டிக் கொண்டாடப் பட்டதுடன், வாழ்வாதார உதவியாக விரைவில் “கோழிகளும், கோழிக்கூடும்” வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத் தக்கது.

சரியான பயனாளிகளை இனம்கண்டு, அதனை உறுதிப்படுத்திய பின்னரே வழங்க வேண்டுமென “மாணிக்கதாசன் பவுண்டேசன்” உயர்பீடமும், நிர்வாகக்குழுவும் கூறி இருப்பதினாலேயே எமக்கு சில காலதாமதம் ஏற்படுகிறது. உரியவர்களின், உரிய தினங்களில் நிகழ்வுகளை நாம் நடத்தினாலும், உரியவர்கள் தரும் முழுமையான நிதிக்கும் சரியானவர்களைக் கண்டு வழங்க எமக்கு காலதாமதம் ஏற்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வீர்களென நம்புகிறோம்.

நாட்டில் கொரோனா தொற்று நோய் காரணமாக ஸதம்பித்துப் போன வர்த்தக மற்றும் வியாபார நடவடிக்கைகள் மீண்டும் ஓரளவு ஆரம்பித்திருந்தாலும் தற்பொழுது கொரோனா தடுப்பூசி ஏற்றல் பரவலாக சகல மாவட்டங்களிலும் நடைபெறுவதால் தொழிற் ஸ்தாபனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரவின்மையால் கொடுக்கப்பட்ட வேலைகள் பூர்த்தியடையவில்லை..

இவ்வாறே ஸ்ரீராஜா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக வழங்குவதற்கு கொடுக்கப்பட்ட கோழிக் கூடு செய்து முடிக்கப்படவில்லை.. விரைவில் கோழிக் கூடு முழுமையாக்கப்பட் டு உரிய பயனாளிக்கு வழங்குவதற்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் உரிய நடவடிக்கையினை எடுக்கும்.

எனவே இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடிய கனடா ஸ்ரீராஜா அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய நிதிப்பங்களிப்புக்காக நன்றியினைத் தெரிவிப்பதோடு தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

07.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.