;
Athirady Tamil News

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், தாயகத்தில் ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

0

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், தாயகத்தில் ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)
##############################

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான ஆனந்தன் என அழைக்கப்படும் லண்டனில் வதியும் திரு.ஆனந்தலிங்கம் கிரிசா தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன்.ஆதேஸ் அவர்களின் பிறந்ததினம் தாயகத்தில் சிறுவர் சிறுமிகளோடு இனிதாக இன்றைய நாளில் கொண்டாடப்பட்டது.

அத்துடன் ஆதேசின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளாந்த கூலித் தொழிலாளர்கள், வயோதிபத் தாய் தந்தையர்கள் அதிக சிறுவர்களைக் கொண்ட குடும்பங்கள், நோயாளாளிகளைக் கொண்ட குடும்பங்கள், உழைப்பாளர்களை இழந்த குடும்பங்கள் என பலதரப்பட்ட குடும்பங்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை நாளாந்தம் சந்திக்கும் அதேவேளை அடுத்தவேளை உணவுக்கும் பல சிரமங்களை எதிர் கொள்கின்றன..

அந்த வகையில் தான் இவ்வாறான தாயக வாழ்க்கை சூழ்நிலையினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயற்பாடுகளை சமூகவலைத் தளங்களில் பார்வையிட்டதன் பயனாக இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் லண்டனில் வசிக்கும் செல்வன்.ஆதேஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உடனடியாக நாளாந்த உணவுக்கு இடர்களை எதிர்கொள்ளும் வயோதிபக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கும்படி செல்வன்.ஆதேஸ் அவர்களின் பெற்றோர்களான லண்டனில் வசிக்கும் திரு திருமதி ஆனந்தலிங்கம் கிரிசா தம்பதிகள் கேட்டுக் கொண்டதற்கமைய ஆதேசின் பிறந்த நாள் நிகழ்வுக்கான உடனடியாக அனைத்து ஒழுங்குகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மேற்கொண்டு நடாத்தி சிறப்பாக முடித்தது.

குறிப்பாக பிறந்த நாள் நிகழ்வு பற்றி ஓரிரு மணித்தியாலய இடைவெளியில் தான் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்கள் நலன் கருதி உடனடியாக நிகழ்வுகள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு பிறந்த நாள் நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

அயல்வீடுகளில் வசிக்கும் சிறுவர் சிறுமியர் கள் ஆர்வமாக கலந்து கொண்டு பிறந்த நாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் ஆதேஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர்..

அத்தோடு மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தெரிவு செய்து அக்குடும்பத்தில் வாழும் வயோதிபத் தாய்மார்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆதேஸ் அவர்களின் பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது..

இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த லண்டன் வாழ் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.திருமதி. ஆனந்தலிங்கம் கிரிசா தம்பதிகளுக்கு தாயகத்தின் உறவுகளின் சார்பில் நன்றி கூறுவதோடு இன்றைய நாளில் இனிய பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வன் ஆதேஸ் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன், கலைகளில், கல்வியில் சிறந்து உயர்வடையவும், சீரிய பண்புகளோடு, நல்ல மனிதமுள்ள மனிதனாக, பெற்றோருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும் என தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வாழ்த்தி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

19.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.