;
Athirady Tamil News

மன்னார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினருக்கு, வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)

0

மன்னார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)
##################################

யாழ் கல்வியங்காட்டை சேர்ந்தவரும், புளொட் அமைப்பின் தோழரும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவரும், திருச்சபையின் மூப்பருமான திரு.திருமதி லோகராஜா (அன்ரன்) ஸ்ரீரஞ்சினி  தம்பதிகளின் பிள்ளைகளான செல்வன்.ஆரோன் செல்வன்.சாரோன், செல்வி.ஒமேகா ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு மன்னார் முருங்கன் கமம் பிரதேசத்தில் வசித்து வரும் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினர் தோழர் விஜயன் என அழைக்கப்படும் திரு. அகஷ்ரின் மரியநாயகம் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளுடன், கோழிக் கூடு வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக வழங்கி வைக்கப்பட்டு இருக்க வேண்டிய இவ்வாழ்வாதார உதவி கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் போடப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் பயணத்தடை காரணமாக காலதாமதமாகினாலும் செல்வங்களான ஆரோன் சாரோன் மற்றும் ஒமேகா ஆகியோரின் பிறந்த தினங்களில் வவுனியாவில் பல்வேறு சமூகப் பங்களிப்புடன் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இருப்பினும் தங்களது பிள்ளைகளின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்க மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இன்றைய நாளில் குறித்த பயனாளியான மன்னார் நானாட்டான் கமம்  கிராமத்தைச் சேர்ந்த திரு.அகஸ்ரின் மரியநாயகம் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளுடன் கூடிய கோழிக் கூடு வழங்கி வைக்கப்பட்டது.

வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட செயலாளர் தோழர் ஜேம்ஸ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்து, வாழ்வாதார உதவியாக கோழிகளையும் வழங்கி வைத்தார்.

வாழ்வாதார உதவியினைப் பெற்றுக் கொண்ட திரு.அகஸ்ரின் மரியநாயகம் அவர்கள் “இவ்வுதவியினை தோழர் ஜேம்ஸ் மூலம் கேட்டிருந்தேன், தருவதாக சொல்லும் நேரத்தில் கொரோனா பிரச்சினையால் ஊரடங்கு பயணத்தடை காரணமாக சற்று காலதாமதமாகினாலும் இன்றைய நாளில் மிகவும் சிரமப்பட்டு மன்னார் நானாட்டான் பிரதேசத்திற்கு வருகை தந்து எனக்கு கோழிகளோடு கோழிக் கூட்டினைத் எனக்குத் தந்துள்ளார்கள். எல்லொருக்கும் நன்றி குறிப்பாக தோழர் ஜேம்ஸ் அவர்களுக்கு விசேடமாக நன்றி சொல்லுகிறேன்” என்றார்.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் லோகராஜா ஸ்ரீரஞ்சினி தம்பதிகளின் பிள்ளைகளான ஆரோன், சாரோன், ஒமேக்கா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வாழ்வாதார உதவிக்கான நிதிப்பங்களிப்பு செய்த பெற்ரோர்களுக்கும்  தாயக உறவுகள் சார்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நன்றியினையும் வணக்கத்தினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

06.10.2021

சுவிஸ் ஆரோனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆர்வத்தோடு கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள். (படங்கள்)

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.