;
Athirady Tamil News

பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)

0

பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
#############################

தாயக யாழ்.குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய “பிரபா ஐயா” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. சிவசுப்பிரமணியம் பிரபாகரன் அவர்களின் ஐம்பத்திரெண்டாவது பிறந்தநாள் நிகழ்வு தாயக கிராமங்களில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகளாக கொண்டாடப்பட்ட து.

இதன் முதல் நிகழ்வாக வவுனியா சிதம்பரபுரம் சிதம்பரநகர் கிராமத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய அன்றாட கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த முற்பதிற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பிரபாகரக் குருக்களின் ஐம்பத்திரெண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. பெருமாள் சஞ்சீவன் அவர்களின் சிறப்பான ஒழுங்கமைப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பெருந்தொகையான மாணவ மாணவிகள் அவர்களின் உறவினர்கள் ஆகியோர் “பிரபாகரக் குருக்களின்” பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

யாழ். குரும்பசிட்டியை சேர்ந்தவரும், சுவிஸ் தூண் ஒபேர்லாண்ட் பிரதேசத்தில் வசிப்பவரும் சுவிஸ் Oberland வாழ் தமிழ் மக்களால் அன்பாக “பிரபா ஐயா” என அழைக்கப்படும் மதிப்புக்குரிய சிவசுப்ரமணியம் பிரபாகரன் (பிரபாகரக் குருக்கள்) அவர்களின் ஐம்பத்திரெண்டாவது பிறந்ததினம் அவரது குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம், வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பிரதேசத்தில் உள்ள சாம்பல்தோட்டம் கிராமத்து மக்களுக்கு பிரபாகரக் குருக்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. கிராமத்தில் வாழும் வயோதிபர்கள் மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், விசேட தேவைக்குடையவர்கள் என பலதரப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மதிய உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு இன்றைய நாளில் தனது ஐம்பத்திரெண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபாகரக் குருக்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திருமதிபவளராணி அவர்கள் நேர்த்தியாக ஒழுங்கமைப்பைச் செய்துள்ளார்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபாகரக் குருக்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நறபணி மன்றம்” தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினரால் மேற்படி நிகழ்வுகளுக்கு வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்புக்கும், மதிப்புடன் கூடிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மணிக்கதாசன் நற்பணி மன்றம்
வவுனியா இலங்கை.

28.02 2022

சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கல்.. (வீடியோ)

சுவிஸ் தூண், பிரபாகரக் குருக்கள் அவர்களின் பிறந்தநாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்… (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.