;
Athirady Tamil News

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, புங்குடுதீவில் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, புங்குடுதீவில் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு, அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக சுவிஸில் வதியும் “திரு.திருமதி.பாபு, ஹேமா குடும்பத்தினர்” வழங்கிய நிதிப் பங்களிப்பில் கடந்த முப்பதாம் திகதி காலை மட்டக்களப்பு “சக்தி இல்ல” மாணவிகளுக்கு விசேட உணவு வழங்கப்பட்டதை அடுத்து, அன்றையதினம் காலை வவுனியா கற்பகபுரம் மூன்றாம் ஒழுங்கை பிரதேசத்தில் மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அன்றையதினம் மதியம் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு, மூன்றாவது நிகழ்வாக வவுனியா கிராமமொன்றில் அவ்வூர் மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.

இதனையடுத்து நான்கு நாட்களுக்கு பின்னர் இன்றையதினம் புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “பாரதி முன்பள்ளி” கட்டிடத்தில்,  “பாரதி முன்பள்ளி” மாணவ மாணவிகளுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் “விசேட உணவு” வழங்கப்பட்டது.

அந்தியேட்டி நிகழ்வுக்கு கிராம மக்கள் கலந்து அமரர் மங்கையற்கரசி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவார பாராயணம் பாடப்பட்டு, அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றதுடன், நிகழ்வுக்கு வருகை தந்த அக்கிராம மக்கள் அனைவருக்கும் விசேட உணவுகள் வழங்கப்பட்டது. அத்துடன் “பாரதி முன்பள்ளி” மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திருமதி. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது மகனான சுவிஸில் வதியும் திரு.திருமதி பாபு ஹேமா குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

30.03 2022.

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, புங்குடுதீவில் நிகழ்வு.. (வீடியோ)

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, கற்பகபுரத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு வழங்கல்.. (வீடியோ)

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, வவுனியா கிராமத்தில் விசேட உணவு வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.