;
Athirady Tamil News

சுவிஸ் தாரணி சுவீதன் அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் தாரணி சுவீதன் அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு வவுனியா சமலங்குளம் பிரதேசத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுவிஸ் பேர்ண் எனும் பிரதேசத்தில் பிறந்து, சுவிஸ் லங்கெந்தால் எனுமிடத்தில் வசிக்கும் திருமதி.தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாளாகிய இன்று தாயக சொந்தங்களுக்காக தனது பிறந்தநாளில் நல்லுதவிகள் வழங்க வேண்டுமென “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” தொடர்பு கொண்டு கேட்டதுக்கு இணங்க மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாளை விசேசமாக ஒழுங்குபடுத்தி பிறந்தநாள் கேக் வெட்டி, பிறந்தநாள் பாட்டுப் பாடி மாணவ மாணவிகள் தமது வாழ்த்தினைத் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. தர்மலிங்கம் யோகராசா எனும் தோழர் யோகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் முன்னிலை வகிக்க, சமளங்குளம் அறநெறிப பாடசாலை ஆசிரியை திருமதி. கலாநீதன் வசந்தமலர், சமளங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் திரு.தியாகராசா, சமளங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.ஈழபிரசாத், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் மற்றும் மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்களும் விருந்தினர்களாகக் கலந்து கொள்ள வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தனது பிறந்தநாளில் பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பை தமது தாயக உறவுகளுக்கு வழங்க விரும்பிய திருமதி தாரணி சுவீதன் அவர்கள் தனது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பான பிறந்த நாளாக மாற்றிய,
பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதார கஷ்டத்தில் வாழும் அப்பிரதேசமான வன்னி பிரதேசத்தில் உள்ள முருகனூர், சமலங்குளம், மருதங்குளம், ஆச்சிபுரம், ஆனந்தபுரம் ஆகிய அனைத்து கிராமங்களில் வாழும் குறிப்பிட்ட பொதுமக்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்.கலந்து கொண்டோருக்கு சிற்றுண்டிகளை வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு தனது பிறந்த நாளை முன்னிட்டு பலவிதமான சமூகப் பணிகளுடன் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான உதவியினையும் வழங்கியுள்ளார் சுவிஸ் வாழ் திருமதி தாரணி சுவீதன் அவர்கள்.

நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் செயலிழந்து போயுள்ள நிலையில் அன்றாட சீவியத்துக்கே மிகவும் துன்பப்படும் நிலையில் இருக்கும் எமது கிராமத்து மக்களுக்கு, தன்னுடைய பிறந்தநாளில் திருமதி தாரணி சுவீதன் அவர்கள் எமக்கு உலருணவுப் பொதிகள் தந்தமைக்கு மனப்பூர்வமான நன்றியினையும், பிறந்தநாள் வாழ்த்துக்களையும் எமது அனைத்து ஊர் கிராம மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என கலந்து கொண்ட பொதுமக்கள், பயனாளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி தாரணி சுவீதன் அவர்களை தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

29.05.2022

சுவிஸ் தாரணி சுவீதன் அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.