;
Athirady Tamil News

இரண்டாம்கட்டமாக சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள்.. (வீடியோ படங்கள்)

0

இரண்டாம்கட்டமாக சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள்.. (வீடியோ படங்கள்)

சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது. சுவிசில் வசிக்கும் திரு திருமதி. சுதாகரன் செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் எளிமையாக அதேநேரம் சந்தோசமாக தாயக உறவுகளினால் வன்னிக் கிராமமொன்றில் கொண்டாடப்பட்டது நீங்கள் அறிந்ததே..

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக பல்வேறு நற்பணிகளை, குறிப்பாக பல்வேறு வாழ்வாதார உதவிகள் உட்பட தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு உதவி வரும் சுவிஸ் வாழ் உறவுகளான “சமய, சமூக தொண்டர்களான” திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் இன்றைய நாளில் தமது இரட்டைச் செல்வங்களான செல்வி அபி, செல்வி அனு ஆகியோரின் பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர் பெரியோர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்துப்பா பாட்டுப் பாடி குதூகலமாக கொண்டாடினார்கள் என்பதும்,

பெருமளவான தாயக உறவுகள் மேற்படி பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு செல்விகளான அபி, அனுவை மனதார வாழ்த்தி சென்றனர் என்பதுடன், அத்துடன் செல்விகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன் விசேடமாக பாயாசமும் சந்தோசமாக வழங்கப்பட்டதுடன்,

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகாரணங்களாக அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், செல்விகள் அபி, அனு இரடடையர்களின் நினைவாக “பயன்தரு தென்னை மரக்கன்றுகளும்” வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து இன்றுமாலை இரட்டைச் செல்வங்களான செல்வி அபி, செல்வி அனு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாம்கட்ட உதவியாக .இரட்டைப் புதல்விகளின் பிறந்தநாளில், இன்றைய நாட்டின் மிகவும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோர், விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என பல தரப்பட்ட குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகளும், பெறுமதியான உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டு கொண்டதிற்கிணங்க இன்றையதினம் வன்னிக் கிராமமொன்றில் பெறுமதியான உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நாளையதினம் மூன்றாம் கட்டமாக தேங்காயுடன் அரிசிப் பொதிகளும், இரடடையர்களின் பிறந்தநாள் நினைவாக பயன்தரு தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு வகைகளில் திரு. திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தாயக உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வகைகளில், இவ்வாறான பணிகளை செய்து வருகின்றார்கள்.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இரட்டைச் செல்வங்களான அபி அனு ஆகியோரை, அவரது அம்மா, அப்பா, அண்ணன் ஆதி மற்றும் அவர்களின் உறவுகள் ஆகியோருடன், தாயக உறவுகளும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இணைந்து பல்கலையும் கற்று, அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

27.06 2022.

இரண்டாம்கட்டமாக சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள்.. (வீடியோ)

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.