;
Athirady Tamil News

சுவிஸ் ஆரோனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் ஆரோனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
#############################

சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் திரு.ஆரோன் லோகராஜா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வேண்டுகோளுக்கு இணங்க சமளங்குளம் அறநெறிப் பாடசாலை ஆசிரியை திருமதி. கலாநீதன் வசந்தமலர் அவர்களின் ஒழுங்கமைப்பில் பெருமளவான தாயக உறவுகள் கலந்து கொண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யாழ் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும், சூரிச் சபையின் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஆரோன் தனது பிறந்த நாளினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா சமளங்குளம் கிராமத்து வாழ் சிறுவர் சிறுமிகளோடு, அக்கிரமத்து மக்களோடு பிறந்தநாள் கேக் வெட்டி, சிற்றுண்டி வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார். அத்துடன் கலந்து கொண்டவர்களில் தெரிவு செய்யப்படட குடும்பங்கள் சிலவற்றுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லினத் தென்னை மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்ட்து.

இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று பிறந்தநாள் காணும் செல்வன் ஆரோனின் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க, சமலங்குளம், ஆனந்தபுரம், எல்லப்பர் மருதங்குளம் ஆகிய பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்டவர்களில், வயோதிபர்கள், நோய்வாய்க்கு உள்பட்டோர், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்டோருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இன்று பிறந்தநாள் காணும் செல்வன் ஆரோனின் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்டவர்களில், சிலருக்கு பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது சமளங்குளம் அறநெறிப் பாடசாலை ஆசிரியை திருமதி. கலாநீதன் வசந்தமலர் அவர்களின் ஒழுங்கமைப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.கிருஷாந்த், சமலங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் திரு.தியாகராஜா, கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.ஈழப்பிரசாத் ஆகியோரும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னனர் தனது ஒரே தங்கையான செல்வி.ஒமேகா அவர்களின் பிறந்ததினத்தை வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் இதேபோல் கொண்டாடி பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லினத் தென்னை மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

செல்வி.ஒமேகாவினதும் அவரது அண்ணனான செல்வன்.ஆரோன் அவர்களதும் பிறந்தநாள் நிகழ்வினை அவர்களது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான வாழ்வாதார உதவி வளங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி மண இணையரின் செல்வப் புதல்வனான ஆரோன் அவர்களது பிறந்தநாள் இன்று தாயகத்தில் வவுனியா சமலங்குளம் கிராமத்தில் சிறுவர் சிறுமியர்களுடன் அவர்களின் பெற்றோர்களும், அக்கிராமத்து பெரியோர்களும் கலந்து கொண்டு செல்வன்.ஆரோனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பாட்டிசைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகளுடன், செல்வி.ஒமேகா மற்றும் செல்வன்.ஆரோன் ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வுகள் யாவும் தாயக உறவுகளின் குழந்தைகளின் பங்குபற்றலோடு இனிதாக நிறைவடைந்தது.

செல்வன்.ஆரோன் அவர்களது பிறந்த நாளில் கலந்து சிறப்பித்த சிறார்கள் தங்களின் வாழ்த்துக்களை செல்வன்.ஆரோன் அவர்களுக்கு தெரிவித்ததுடன் “நாட்டின் பொருளாதார இடர்மிகு காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளாலும், அவர்களின் உதவிகளாலும் மகிழ்ச்சியாக உள்ளதாக” தெரிவித்தனர்.

ஏற்கனவே செல்வி.ஒமேகாவின் பிறந்த நாளிலும் பிறந்தநாள் பாட்டிசைத்து கேக் வெட்டி கொண்டாடியதும், ஏழை எளியோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கியதையும் நினைவுப்படுத்தி மகிழ்ச்சியாக ஆரவாரப்படுத்தினர்.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் செல்வி ஒமேகா மற்றும் செல்வன்.ஆரோன் இருவர்களுடைய பிறந்த நாளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்துள்ளது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன்.ஆரோன் அவர்களை பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

30.07.2022

சுவிஸ் ஆரோனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.