;
Athirady Tamil News

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “அரிசிப் பொதிகள்” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “அரிசிப் பொதிகள்” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
##############################

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் ஜெகன் மற்றும் சசி என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. ஜெகேந்திரராஜா சசிகலா தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.ஜெசிக்கா அவர்களின் ஐந்தாவது பிறந்ததினம் தாயகத்தில் சிறுவர் சிறுமிகளோடு இனிதாக இன்றைய நாளில் கொண்டாடப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான பொருளாதார சூழ்நிலையால் மிகவும் கஸ்ரத்துக்கு மத்தியில் வாழும் எல்லைக் கிராமங்களான இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவியாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் செல்வி. ஜெசிக்காவின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் “அரிசிப் பொதிகள்” வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி.ஜெசிக்கா ஜெகன் அவர்களின் ஐந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு அக்கிராமத்தில் வசிக்கும் சிறுவர் சிறுமியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மிகவும் மகிழ்சசியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் செல்வி.ஜெசிக்கா ஜெகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அவர்களின் பெற்றோர், அக்கிராம மக்கள் என அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நாளாந்த வருமானத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்காக அந்தரப்படும் உறவுகளுக்கு குறிப்பாக பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கும் வாழ்வாதார உதவியாக அரிசிப் பொதிகள் அடங்கிய உலருணவுப் பொதிகளை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய இணைப்பாளர்களும் இணைந்து சிறப்பாக நடாத்தப்பட்ட்து.

இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த செல்வி.ஜெசிக்கா ஜெகன் அவர்களின் பெற்றோர்களான திரு.திருமதி.ஜெகன் சசிகலா தம்பதிகளுக்கு தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு

இன்றைய நாளில் இனிய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் “செல்வி.ஜெசிக்கா ஜெகன்” அவர்கள் தேக ஆரோக்கியத்துடன், கலைகளில், கல்வியில் சிறந்து உயர்வடையவும், சீரிய பண்புகளோடு, நல்ல மனிதமுள்ள புரட்சிப் பெண்ணாக பெற்றோருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும்” என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வாழ்த்தி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

20.11.2022

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “அரிசிப் பொதிகள்” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.