;
Athirady Tamil News

வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட குமுழமுனை ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

36 அகவையுடைய பூதன்வயல் முள்ளியவளையினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ரவிச்சந்திரன் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தினை மீட்ட முல்லைத்தீவு பொலிசார் சடலத்தினை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மரண விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பாம்பு தீண்டி குறித்த விவசாயி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.