;
Athirady Tamil News

கலசபாக்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை…!!

0

கலசபாக்கத்தை அடுத்த கப்பலூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 58) விவசாயி. இவரது இரண்டாவது மனைவி வளர்மதி. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த துரைராஜ் மனைவி வளர்மதியை விறகு கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய துரைராஜை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊருக்கு சிறிது தூரத்தில் துரைராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்முதல் நாள் இரவே மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து துரைராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.