;
Athirady Tamil News

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம் !! (படங்கள், வீடியோ)

0

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றதை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் பராட்டப்பட்டதுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி நடாத்தப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றதை முன்னிட்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று காலை 11மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன்,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளீதரன், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உற்பத்தித் திறன் பிரிவு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உற்பத்தித்திறன் குழுவினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.