;
Athirady Tamil News

காஷ்மீர் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் பலி – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

0

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவதேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோ காயமந்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 12 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.