;
Athirady Tamil News

தொழிலதிபர் ESPநாகரத்தினத்திற்கு கலாநிதி பட்டம்! (படங்கள்)

0

தொழிலதிபர்,கல்விக்காருண்யன் லயன்.E.S.P.நாகரத்தினம் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மனிதநேயம் மற்றும் சமூகசேவைகளுக்காக கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இக் கலாநிதிபட்டமானது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் முன்னால் பீடாதிபதி பேராசிரியர் திரு.சந்திரசேகரம் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரினை சொந்த இடமாக கொண்ட பிரபல தொழிலதிபர் கல்விகாருன்யன் E.S.P நாகரத்தினம் வடபகுதியில் கல்வி, விளையாட்டு துறைக்கு தன்னாலான பல்வேறு சேவைகளை ஆற்றி வருவதோடு இந்து ஆலயங்களுக்கும் தன்னாலான உதவிகளை வழங்கி வரும் நிலையில் கொழும்பு பல்கலைக் கழகத்தினால் கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.