;
Athirady Tamil News

’ஐந்து நாட்களுக்கு தேவையான எரிபொருளே உள்ளது’ !!

0

ஐந்து நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திர​மே கையிருப்பில் உள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்கு ​தேவையான எரிபொருளை மாத்திரமே ரயில்வே திணைக்களத்தில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். தற்போது இந்த கையிருப்பு 50 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களம் வசமுள்ள எரிபொருளின் அளவு குறைந்தாலும், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது. ரயில் போக்குவரத்துக்காக நாளொன்றுக்கு ஒரு இலட்சம் லீற்றர் தேவைப்படும் நிலையில், நாளாந்த கொள்முதல் அடிப்படையிலேயே ரயில்வே திணைக்களத்துக்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.