;
Athirady Tamil News

மீண்டும் வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தம்

0

புனர்நிர்மாணப் பணிகளளால் மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமுடனான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் பாதையில் ஐந்து பாலங்களில் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலங்களை அகற்றிவிட்டு, புதிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அதேவேளை ஐந்து பாலங்களும் இந்திய கடன் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.