;
Athirady Tamil News

சுவிஸில் மலை கிராமத்தின் 90% புதைத்த நிலச்சரிவு: ஒருவர் மாயம்!

0

சுவிட்சர்லாந்தின் மலை கிராமத்தை நிலச்சரிவு புதைத்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சுவிஸில் பனிப்பாறை சரிவு

சுவிட்சர்லாந்தின் மலை கிராமமான பிளாட்டனில்(Blatten), பாறை, மண் மற்றும் பனியின் மிகப்பெரிய சரிவு காரணமாக சுமார் 90% கிராமம் புதைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் கண்டோனில்(Valais canton) உள்ள இந்த கிராமத்திற்கு மேலே இருந்த ஒரு பனிப்பாறை பகுதியளவு சரிந்ததால் புதன்கிழமை இந்த பேரழிவு நிகழ்ந்தது.

“நம்பமுடியாத அளவிற்கு பொருட்கள் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தன,” என்று உள்ளூர் அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் மத்தியாஸ் எபெனர் தெரிவித்ததோடு, ஒருவர் காணாமல் போனதை உறுதிப்படுத்தினார்.

முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்ட மக்கள்
மே 19 அன்று, சுமார் 300 குடியிருப்பாளர்களும் அவர்களது கால்நடைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிராமத்திற்கு மேலே இருந்த 1.5 மில்லியன் கன மீட்டர் (52 மில்லியன் கன அடி) பனிப்பாறை உடனடியாக சரியும் அபாயத்தில் இருப்பதாக புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

உள்ளூர் கவுன்சிலர் ஸ்டீபன் கான்சர் சுவிஸ் ஊடகங்களிடம், அழிவுகரமான மண் மற்றும் பாறை சரிவு “முதல் பார்வையில் கிராமத்தின் 90% ஐ மூடிவிட்டது” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.