;
Athirady Tamil News

விபத்தின் பின்னர் இயங்கிய துப்பாக்கி!!

0

கோனாபினுவல சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மிதி வண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விபத்து இடம்பெற்ற பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பையை சிலர் பறிக்க முயற்சிக்கும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பையில் இருந்து டி56 ரக துப்பாக்கி ஒன்று திடீரென இயங்கியுள்ளது.

மூன்று முறை துப்பாக்கி இயங்கியுள்ள நிலையில் இதன் காரணமாக இவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் துப்பாக்கி வைத்திருந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோனாபீனுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.