;
Athirady Tamil News

வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் நிறுத்தம்!!

0

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர்
பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என்றார்.

அதேவேளை நோயாளிகளுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.