;
Athirady Tamil News

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – நோபல் பரிசு வென்றவரின் பத்திரிகைக்கு தடை விதித்தது ரஷியா…!!

0

09.50: உக்ரைனில் பாதுகாப்பு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷியா போர் தொடுத்த நாள் முதல், உக்ரைனை விட்டு 36 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

06.15: ரஷிய அதிபர் புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனக் கூறிய அதிபர் ஜோ பைடன், நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

04.20: நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அறிவிப்பை ஜி-7 நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை என ஜெர்மனியின் எரிவாயு மந்திரி ராபர்ட் ஹாபெக் தெரிவித்தார்.

02.15: ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது. இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகிறோம் என கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

00.15: போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முராடோவின் நோவா கெஜட் என்ற நாளிதழை ரஷிய அரசு தடை செய்துள்ளது. இதன் உரிமையாளரான டிமிட்ரி முராடோவ் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான நேர்காணலை ஒளிபரப்புவதை, வெளியிடுவதை தவிர்க்கும்படி ரஷியாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு ரஷிய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.