;
Athirady Tamil News

குறைந்த விலையில் கோழி இறைச்சியை வாங்க வேண்டாம் !!

0

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்​னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டால், அவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என,கோழி இறைச்சி விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்களைப் பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் இவ்வாறான செயல்களை செய்வதாகவும் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இவ்வாறு உயிரிழக்கும் கோழிகளை வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பாமல், நுகர்வோரின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.