;
Athirady Tamil News

சடலத்தை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு சென்ற போது நேர்ந்த சோகம்!

0

செட்டிகுளம் – வீரபுரத்தில் சுடுகாட்டுக்கு சென்ற போது குளவிக்கு கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்பு

செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், வீரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றின் போது சடலத்தை தகனம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற போது மரம் ஒன்றில் இருந்து கலைந்து வந்த குளவிகள் அங்கு வந்தவர்கள் மீது கொட்டியதில் 15 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதனையடுத்து குளவிகள் அங்கிருந்து சென்ற பின்னரே சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.