;
Athirady Tamil News

யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் மீது மற்றுமொரு வன்முறை கும்பல் வாள் வெட்டு!!

0

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் “அளவெட்டி கனி” என அழைக்கப்படுபவர் என்றும் , குறித்த நபர் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த நபர் “வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு வந்த போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.