;
Athirady Tamil News

யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.!! (படங்கள்)

0

யாழ்.நகரில் உள்ள சமையல் எரிவாயு விநியோக இடத்தில் காத்திருந்த மக்களுக்கு எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்படாத நிலையில், யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் அங்கு நின்ற மக்களுக்கு மட்டும் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

நகரிலிருந்து கொட்டடி செல்லும் வீதியில் உள்ள குறித்த மொத்த விநியோக இடத்தில் நேற்று காலை பொதுமக்கள் காத்திருந்த நிலையில் அங்கு விற்பனை செய்யப்படுவதில்லை எனவும், அருகில் உள்ள விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றிருந்தனர். எனினும் விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லாத நிலையில் மீண்டும் பொதுமக்கள் அப்பகுதியில் கூடியதால் யாழ்.மாவட்டச் செயலர் விநியோக பணிகளை நிறுத்துமாறு கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர் யாழ்.மாவட்டச் செயலரின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்ற நிலையில் அவ்வாறான அறிவித்தல் எதனையும் தான் விடுக்கவில்லை. என கூறிய மாவட்டச் செயலர் தாம் இதில் தலையிடுவதாக கூறியிருந்தார்.

பின்னர் மாவட்டச் செயலரின் தலையீட்டை தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த பொலிஸார் வெளியில் இருந்து மேலும் பொதுமக்கள் உள்நுழையாதவாறு பாதைகளை பூட்டியபின்னர் காலையிலிருந்து சமையல் எரிவாயுக்காக காத்திருந்த மக்களுக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு இல்லை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.