;
Athirady Tamil News

தொல்பொருட்களுடன் சிக்கிய பெண் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

0

மினுவாங்கொடை – மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை வைத்திருந்த 41 வயதுடைய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (01) மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெண் சந்தேகநபர்
எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் சந்தேகநபர் ஒருவரும், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.