;
Athirady Tamil News

வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர!!

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருள் பெறுவதற்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை ஆரம்பிக்கப்படும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.