;
Athirady Tamil News

மந்திரி ஆர்.கே.ரோஜாவை 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் போட்டோ எடுத்து சாதனை..!!

0

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருப்பவர் ஆர்.கே.ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ஆர்.கே. ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர். இதையடுத்து மந்திரி ஆர்.கே. ரோஜா திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்க வைக்கப்பட்டனர். அவர்கள் “ஒன் கிளிக் ஆன் சேம் டைம்” என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் மந்திரி ஆர்.கே.ரோஜாவை போட்டோ எடுத்தனர். உலகத்தில் இதுவரை யாரும் ஒருவரை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கவில்லை. எனினும், மந்திரி ஆர்.கே.ரோஜா “வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து மந்திரி ஆர்.கே.ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.