;
Athirady Tamil News

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!

0

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ளது. தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் என்றும், அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.