வத்தளையில் இரு இளைஞர்கள் கைது!!
கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கைக்குண்டு மற்றும் 12 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் 20 – 25 வயதுடைய ஜா-எல மற்றும் கந்தானையை சேர்ந்தவர்கள்.
அவர்கள் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.