;
Athirady Tamil News

புங்குடுதீவில் விளையாட்டு வீர , வீராங்கனைகளுக்கு உலருணவு வழங்கல் ( படங்கள் இணைப்பு )

0

அண்மையில் புங்குடுதீவில் உதவும் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இளையோருக்கான உதைபந்தாட்ட போட்டித்தொடரும் , வலைப்பந்தாட்ட போட்டித்தொடரும் நடாத்தப்பட்டிருந்தன . ஆண்களுக்கான உதைபந்தாட்ட தொடரில் புங்குடுதீவு பாரதி கழகமும் , புங்குடுதீவு அம்பாள் கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன . பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் புங்குடுதீவு சென்சேவியர் கழகமும் , புங்குடுதீவு நசரெத் கழகமும் தெரிவாகியிருந்தன . மேற்படி கழகங்களின் 45 வீர , வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .

பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக சிவில் சமூக அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன், வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், பூமணி அம்மா அறக்கட்டளையின் யாழ்.கிளைத் தலைவர் தனேந்திரம், மேற்படி அறக்கட்டளையின் இணைப்பாளர் யோசப் , புங்குடுதீவு உதவும் உறவுகள் அமைப்பின் உறுப்பினர்களான சில்வஸ்ரர் மற்றும் சுதர்ஷன் ( லக்சன் ) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.