;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் அன்னாசி பயிற்செய்கை!! (படங்கள்)

0

நகரப்புறங்களில் சாடி முறையிலான அன்னாசி பயிற்செய்கையினை மேற்கொள்ளும் செயற்திட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த அன்னாசி பயிற்செய்கையானது மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அது அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாட ஆசிரியர் குமாரசாமி கலைதீபனின் நெறிப்படுத்தலில் பாடசாலையில் குறித்த பாடவிதானத்தினை கற்கும் மாணவர்களின் உதவியோடு குறித்த அன்னாசி செய்கை முறையானது மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த செயல் திட்டத்திற்கு யாழ்ப்பாணம் இந்த கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறனும் பூரணமான ஆதரவினை வழங்கி வருகின்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.