;
Athirady Tamil News

இலங்கைக்காக ஜப்பான் செய்யவுள்ள விடயம் !!

0

இலங்கையின் கடன் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளை ஒன்று கூட்டுவது முக்கியம் என்றும் டோக்கியோ கடன் வழங்குநர்களை ஒருங்கிணைக்கும் என்றும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருதரப்புக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானிடம் இலங்கை கோரிக்கை விடுக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரொய்ட்டர்ஸிடம் கடந்தமாதம் தெரிவித்திருந்தார் என்றும் ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான கடன் வழங்குநர் சந்திப்பை நடத்துவது தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஜப்பானிய நிதி அமைச்சர், இன்றையதினம் இவ்விடயத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.