;
Athirady Tamil News

இலங்கை மின்சார சபையில் மறுசீரமைப்பு !!

0

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (04) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உட்பட எழுவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் இன்று (04) காலை கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் குழு, அபிவிருத்தி முகவர்கள், துறைசார் நிபுணர்கள், பங்குதாரர்களை சந்தித்துள்ளதுடன், அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.