;
Athirady Tamil News

குமார வெல்கமவுக்கு சந்திரிக்காவின் நிபந்தனை !!

0

திருடர்கள், கொலைக்காரர்களை புதிய சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் குமார வெல்கம எம்.பிக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

புதிய சுதந்திரக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைவரையும் புதியக் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என குமார வெல்கம கூறுகிறார். திருடர்களை மாத்திரம் இணைத்துக்கொள்ள வேண்டாம் என நான் குமர வெல்கமவுக்கு நிபந்தனை ஒன்றை விதிக்கிறேன். பிரபல திருடர்கள், கொலைக்காரர்களை இணைத்துக்கொண்டு முன்நோக்கிச் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.