யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பற்றிய விவகாரம் – கலாசாலைகள் தமது சுயாதீனத் தன்மையுடன் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 30 05 2025 இடம்பெற்றபோது கோப்பாய் ஆசிரியர் கலாசாலையை கல்வியியல் கல்லூரியுடன் இணைப்பது தொடர்பான விவகாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களால் முன்மொழியப்பட்ட இவ்விகாரத்தில் கல்வியல் கல்லூரியுடன் இணைத்து பயிற்சி வழங்கும் போது ஆசிரியர் கலாசாலைகளின் சுயாதீனத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்
மேலும் கடந்த 22 05 2025 அன்று பிரதம மந்திரியிடம் ஆசிரியர் கலாசாலைகள் தொடர்பான வினாவை தானே தொடுத்ததாக சுட்டிக்காட்டிய அவர் – நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கலாசாலை சேவையின் பின்னான (in service ) பயிற்சியை வழங்குகின்ற நிறுவனம் எனவும் கல்வியியல் கல்லூரிகள் சேவை முன் பயிற்சியை (pre service) வழங்குகின்ற நிறுவனம் எனவும் தெரிவித்தார்.
அதிகளவான ஆசிரியர்களை கல்வியில் கல்லூரிகள் ஊடாக பயிற்றுவதற்கான தேவை எழுந்துள்ள நிலையில் கலாசாலைகளை மூடாமல் அவற்றின் சுயாதீனத் தன்மைகளை பேணியவாறு இப்பயிற்சிகளை வழங்கலாம் எனவும் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் இக்கருத்தை ஆதரித்து பேசினார்
இக்கூட்டத்தில் கலாசாலையின் சார்பில் பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் கலந்து கொண்டார்.
இதேவேளை கலாசாலை அதிபர் இசுருபாய கல்வி அமைச்சில் ஆசிரிய கல்விக்கான பிரதம ஆணையாளர் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் (வட மாகாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்து தெரிவாகிய 92 தமிழ் மொழி மூல ஆங்கில மொழி மூல ஆசிரிய கல்வியாளர்களுக்கான) இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவை திசை முகப்படுத்தல் பயிற்சியை வழங்குவது தொடர்பாக நடத்திய கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது