;
Athirady Tamil News

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு!! ( படங்கள் இணைப்பு )

0

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மண்டபத்தில் 17.09.2022 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. ஏற்கனவே குறித்த அமைப்புக்களின் அனுசரணையில் வேலணை துறையூரில் இரண்டு கட்டங்களாக செயலமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் மூன்றாம் கட்ட செயற்பாடுகள் இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி.ஸ்ரீரங்கநாதன் அவர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ்விசேட செயலமர்வுகளில் தீவக வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியைகள் சுமார் 160 பேர் வரையில் பங்குபற்றிப் பயனடைந்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ்கள் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் மற்றும் புங்குடுதீவு உலக மையம் ஆகியவற்றின் அனுசரணையில் தீவக கல்வி வலயத்தினால் வழங்கி வைக்கப்படவுள்ளன .

You might also like

Leave A Reply

Your email address will not be published.