;
Athirady Tamil News

2-வது நாளாக பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் புதிதாக 5,443 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் புதிதாக 5,443 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 4,043 ஆக இருந்தது. நேற்று 4,510 ஆக அதிகரித்த நிலையில் இன்று 2-வது நாளாக பாதிப்பு உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 2,088 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5,291 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 78 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 126 அதிகரித்துள்ளது. அதன்படி 46,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 12 மரணங்கள் உள்பட மேலும் 26 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,429 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.