;
Athirady Tamil News

யாழில். போதையில் அண்ணியுடன் தகாத உறவுக்கு முயற்சித்த இளைஞனை தேடும் பொலிஸ்!!

0

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்ணியுடன் , போதை தலைக்கேறிய நிலையில் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்து வந்ததுடன் , பெண்களை தகாத வார்த்தை பிரயோகங்களால் பேசியும் வந்துள்ளார்.

குறித்த இளைஞனின் போதை அட்டகாசங்கள் அதிகரித்து வந்த நிலையில் , தனது அண்ணனின் வீட்டுக்கு சென்று அண்ணன் இல்லாத நிலையில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இளைஞனிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த அண்ணி அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது இளைஞன் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.