;
Athirady Tamil News

பைக்கை திருடிக்கொண்டு பாய்ந்து சென்ற திருடர்கள்… காவலாளி செய்த தரமான சம்பவம்..!!

0

தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், பைக் திருடர்கள் கேட்டில் மோதி விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தன்து மதியம் 2 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அந்த காலனிக்குள் 2 பேர் வந்துள்ளனர். அப்போது, கூரியர் டெலிவரி ஏஜென்ட் ஒருவர் பைக்கில் சாவியை அப்படியே வைத்து விட்டு வீட்டின் காலிங் பெல்லை அடிக்க சென்றதை கவனித்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்து, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த டெலிவரி ஏஜெண்ட், தனது பைக்கை திருடிக்கொண்டு போவதாக கூச்சலிட்டார். உடனே குடியிருப்பின் காவலாளி ஓடிச் சென்று கேட்டை சாத்தினார். இதனால் கேட் மீது பைக் மோதி, பைக் திருடர்கள் இருவரும் கீழே விழுந்தனர். அவர்களில் ஒருவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவன் பக்கத்து காலனியில் உள்ள பூங்காவில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டான். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காவலாளி சரியான நேரத்தில் கேட்டை சாத்துவதும், வேகமாக சென்ற பைக் திருடர்கள் கேட்டில் மோதி விழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.