;
Athirady Tamil News

திடீரென தீப்பற்றிய பயணிகள் ரெயில்: 150 பயணிகள் உயிர் தப்பினர்..!!

0

ஒடிசா மாநிலம் பத்ரக் – காரக்பூர் பயணிகள் ரெயில் இன்று தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. புகை வெளியேறுவதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அந்த ரெயிலை நிறுத்த ஓட்டுனருக்கு உத்தரவிட்டனர். அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக் கொண்டிருந்த நிலையில், ரெயிலுக்குள் இருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலில் இருந்து வெளியே குதித்து ஓட்டம் பிடித்தனர். பலரை ரெயில்வே அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடைசி பெட்டியில் ஏற்பட்ட தீ, அடுத்த பெட்டி வரை பரவியது. உரிய நேரத்தில் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயை முழுவதுமாக அணைக்கும் வரை, பஹ்னாகா ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களும் புறநகரில் நிறுத்தப்பட்டன. தற்போது விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது’ என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.