;
Athirady Tamil News

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

0

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,994 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 742 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,601 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 90 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,432 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லி, மகாராஷ்டிரா, நாகலாந்து மற்றும் சத்தீஸ்கரில் தலா ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,961 ஆக உயர்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.