;
Athirady Tamil News

கேரளாவில் வீட்டில் வளர்த்த செல்ல நாய்க்கு உணவளிக்க தாமதம் ஆனதால் உறவினரை அடித்து கொன்ற வாலிபர்,,!!

0

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த முளயன்காவு பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 27). இவரது உறவினர் அர்சாத் (21). இவர்கள் இருவரும் தனியார் டெலிபோன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.இதற்காக மண்ணாங்கோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் காயங்களுடன் அர்சாத்தை ஹக்கீம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது மாடியில் இருந்து தவறிவிழுந்து விட்டதாகவும், இதில் படுகாயம் அடைந்ததாகவும் டாக்டர்களிடம் கூறினார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அர்சாத் பரிதாபமாக இறந்து போனார். அர்சாத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் உடலில் பெல்ட் மற்றும் கட்டையால் அடித்த காயங்கள் இருப்பதை கண்டனர். இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அர்சாத்தை ஹக்கீம் அடித்து கொன்றது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. ஹக்கீம் வளர்த்த செல்ல நாய்க்கு தினமும் அர்சாத்தான் உணவு கொடுப்பாராம். சம்பவத்தன்று நாய்க்கு உணவு கொடுக்க தாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் நாய் குரைத்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹக்கீம், உறவினர் என்றும் பாராமல் அர்சாத்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அர்சாத் இறந்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் ஹக்கீமை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.