;
Athirady Tamil News

நெல்லியடியில் நான்கு இளைஞர்கள் கைது!!

0

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதான நபர்களிடம் இருந்து 126 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.